search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான் ஏலம் எடுக்கப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை- லுங்கி நிகிடி
    X

    நான் ஏலம் எடுக்கப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை- லுங்கி நிகிடி

    நான் ஐபிஎல் ஏலத்தில் ஏலம் எடுக்கப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK
    சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி. இவர் நான்கு ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

    லுங்கி நிகிடியை 50 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் எடுத்தது. ஐந்து போட்டியில் விளையாடி 9 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தான், ஏலம் எடுக்கப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்கிறார்.



    இதுகுறித்து நிகிடி கூறுகையில் ‘‘முதலில் ஐபிஎல் ஏலத்தில் நான் ஏலம் எடுக்கப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால், என்மீது நம்பிக்கை வைத்து சென்னை பயிற்சியாளர் பிளமிங் மற்றும் கேப்டன் டோனி ஏலம் எடுத்தது சிறப்பானது.

    அனுபவம் என் கண்முன்னே கிடைத்துக் கொண்டு இருக்கிறது. இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு நடுவே விளையாடியதே கிடையாது. இந்த இடம் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது காண்பதற்கானது. ஆகவே, எனக்கு சிறந்ததாக இருக்கிறது’’ என்றார்.
    Next Story
    ×