search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎல் ராகுல், முஜீப், என்னைத் தவிர மற்றவர்கள் சரியில்லை- அன்ட்ரிவ் டை
    X

    கேஎல் ராகுல், முஜீப், என்னைத் தவிர மற்றவர்கள் சரியில்லை- அன்ட்ரிவ் டை

    கேஎல் ராகுல், முஜீப் மற்றும் என்னைத் தவிர மற்ற வீரர்கள் போதுமான அளவிற்கு விளையாடவில்லை என அன்ட்ரிவ் டை கூறியுள்ளார். #IPL2018 #KXIP
    ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வரும் லோகேஷ் ராகுல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 13 போட்டிகளில் 652 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 அரைசதங்கள் அடங்கும். கடைசியாக இரண்டு மூன்று ஆட்டங்களில் கடைசி வரை ஒரு நபராக நின்று அணியின் வெற்றிக்கு போராடுகிறார். மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் அணி தோல்வியை சந்திக்கிறது. இதேபோல் பந்து வீச்சில் அன்ட்ரிவ் டை, முஜீப் உர் ரஹ்மான் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் 94 ரன்களும், அன்ட்ரிவ் டை 4 விக்கெட் வீழ்த்தியும் பெற்ற முடியாமல் போனது. இதனால், ராகுல், முஜீப் மற்றும் என்னைத் தவிர மற்றவர்கள் சரியாக விலையாடவில்லை என்று அன்ட்ரிவ் டை வேதனை அடைந்துள்ளார்.

    இதுகுறித்து அன்ட்ரிவ் டை கூறுகையில் ‘‘மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் 186 ரன்கள் எடுத்தது ஒரு காரணம். நாங்கள் சிறப்பாக சேஸிங் செய்து வந்தோம். ஆனால் கடைசியில் வெற்றி பெற முடியாமல் போனது.



    நான் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியது பெரிய விஷயம் கிடையாது. மற்ற யாரும் உங்களுடன் இணைந்து பந்து வீசவில்லை என்றால், அது ஒட்டுமொத்த அணி முயற்சி கிடையாது. இதனால்தான் நாங்கள் ஐபிஎல் தொடர் முழுவதும் திணறி வருகிறோம்.

    கேஎல் ராகுலுடன் நிலைத்து நின்ற விளையாடுவதற்கும், என்னுடன் மற்றும் முஜீப் உடன் இணையாக யாரும் பந்து வீசவில்லை. மும்பை அவர்களது சிறப்பான பீல்டிங்கால் வெற்றி பெற்றார்கள். நெருக்கமான ஆட்டத்தில் ஒன்றிரண்டு பவுண்டரிகளை தடுத்துவிடுகிறார்கள். அதேபோல் ஒன்றிரண்டு டாட் பந்து வீசுவதால் ஐந்து போன்ற ரன்களில் தோற்பது இது முக்கியமானதாக கருதப்படுகிறது’’ என்றார்.
    Next Story
    ×