search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு சில நபர்கள் அல்ல, எல்லோருமே சிறப்பாக விளையாடுகிறார்கள்- பிவி சிந்து
    X

    ஒரு சில நபர்கள் அல்ல, எல்லோருமே சிறப்பாக விளையாடுகிறார்கள்- பிவி சிந்து

    பேட்மிண்டனில் ஒரு சில நபர்கள் அல்ல, எல்லோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் என பிவி சிந்து தெரிவித்துள்ளார். #PVSindhu
    ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் இந்தியாவின் பேட்மிண்டன் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சாய்னா நேவால் - பிவி சிந்து பலப்பரீட்சை நடத்தினார்கள். இதில் சாய்னா வெற்றி பெற்று தங்கம் வென்றார். பிவி சிந்து வெள்ளி பதக்கம் வென்றார். இருவரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள்.

    ஒரு சில தனிப்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் மட்டுமல்ல, எல்லோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்று பிவி சிந்து கூறியுள்ளார்.



    இதுகுறித்து பிவி சிந்து கூறுகையில் ‘‘வெற்றித் தோல்வி என்பது விளையாட்டு வாழ்க்கையின் ஒரு பகுதி. முடிவு எப்போதும் நமக்கு சாதமாக இருக்க முடியாது. நான் என்னுடைய முயற்சிகள் அனைத்தையுமே வெளிப்படுத்தினேன். ஆனால் சாய்னா சிறப்பாக விளையாடினார்.

    அன்றைய நாள் அவருக்குரியதாக இருந்தது. அவருக்கு எதிரான ஆட்டத்தில் செய்த தவறுகளில் இருந்து ஏராளமாக  கற்றுக் கொண்டார். தற்போது அதிலிருந்து வலிமையாக திரும்பியுள்ளேன்.

    முதல்முறையான நமது கலப்பு அணி தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது. நாம் எல்லாவற்றையும் சிறப்பாக செய்தோம். நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்’’ என்றார்.
    Next Story
    ×