என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிக்கலில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பட்லர், பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து செல்கிறார்கள்
Byமாலை மலர்16 May 2018 8:30 AM GMT (Updated: 16 May 2018 8:30 AM GMT)
பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இங்கிலாந்து தேசிய அணிக்குச் செல்வதால் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. #IPL2018 #RR #Buttler
ஐபிஎல் 11-வது சீசன் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளைத் தவிர மற்ற அணிகள் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறவில்லை. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
இதனால் 13 ஆட்டங்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. கடைசி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மே 19-ந்தேதி எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பு உள்ளது.
முக்கியமான ஆட்டத்திற்கு தயாராகும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் இருந்து வந்த செய்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை திரும்ப அழைக்கிறோம் என்று கூறியுள்ளது.
விரைவில் பாகிஸ்தான் டெஸ்டில் இங்கிலாந்து விளையாட இருப்பதால் அதற்கான பயிற்சியை மேற்கொள்வதற்காக அவர்களை திரும்ப அழைக்கிறது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாட இருக்கிறது.
இதனால் 13 ஆட்டங்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. கடைசி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மே 19-ந்தேதி எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பு உள்ளது.
முக்கியமான ஆட்டத்திற்கு தயாராகும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் இருந்து வந்த செய்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை திரும்ப அழைக்கிறோம் என்று கூறியுள்ளது.
விரைவில் பாகிஸ்தான் டெஸ்டில் இங்கிலாந்து விளையாட இருப்பதால் அதற்கான பயிற்சியை மேற்கொள்வதற்காக அவர்களை திரும்ப அழைக்கிறது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாட இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X