search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்தை சேதப்படுத்திய பான்கிராப்ட் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அனுமதி
    X

    பந்தை சேதப்படுத்திய பான்கிராப்ட் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அனுமதி

    தென்ஆப்பிரிக்கா தொடரில் பந்தை சேதப்படுத்தி தடைபெற்ற பான்கிராப்ட் கிளப் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, கேப் டவுனில் நடைபெற்று 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்கள். இதில் ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்தது.

    தடைவிதிக்கப்பட்ட ஸ்மித் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றிருந்தார். அதன்பின் சமீபத்தில் சொந்த நாடு திரும்பினார். அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்து வருகிறன்றனர். ஆஸ்திரேலியா கிரக்கெட் வாரியத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் ஸ்மித், வார்னரால் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாட முடியும் என்று கூறி வருகிறார்கள்.



    இதற்கிடையே கிளப் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஸ்மித், வார்னருக்கு நியூ சவுத் வேல்ஸ் அனுமதி அளித்தது. இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய பான்கிராப்ட் கிளப் கிரிக்கெட்டில் விளையாட வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.

    Next Story
    ×