என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து கோலிக்கு நம்பமுடியாத தொடராக இருக்கும்- வார்னே கணிப்பு
Byமாலை மலர்14 May 2018 1:40 PM GMT (Updated: 14 May 2018 1:40 PM GMT)
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு நம்பமுடியாததாக இருக்கும் என வார்னே தெரிவித்துள்ளார். #ENGvIND #ViratKohli
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 50-க்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலிதான். ஆஸ்திரேலியா, தென்ஆப்பரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தனது திறமையை நிரூபித்து விட்டார்.
ஆனால் இங்கிலாந்து மண்ணில் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கிடையாது. கடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா ஐந்து டெஸ்டில் விளையாடியது. அப்போது ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஸ்விங் பந்தில் திணறினார். இதனால் இங்கிலாந்து மண்ணில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் உலகின் தலைசிறந்த வீரர் என்று கருத முடியும் என முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்திருந்தார்.
ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்தியா இங்கிலாந்து செல்கிறது. அப்போது ஐந்து டெஸ்டில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் விராட் கோலி கவுன்டி போட்டியில் விளையாடுகிறார்.
இந்நிலையில் இங்கிலாந்து விராட் கோலிக்கு நம்பமுடியாத தொடராக இருக்கும் என ஷேர் வார்னே தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷேன் வார்னே கூறுகையில் ‘‘இந்தியா முதலில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. விராட் கோலியால் சாதிக்க முடியாத ஒரே இடம் அதுதான். இந்த வருடம் இங்கிலாந்து மண்ணில் அவர் சாதிப்பார். இங்கிலாந்து விராட் கோலிக்கு நம்ப முடியாத தொடராக இருக்கும் என நினைக்கிறேன். இங்கிலாந்தில் அசத்தும் அதே வேகத்துடன் அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலியா தொடரிலும் அசத்துவார்’’ என்றார்.
ஆனால் இங்கிலாந்து மண்ணில் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கிடையாது. கடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா ஐந்து டெஸ்டில் விளையாடியது. அப்போது ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஸ்விங் பந்தில் திணறினார். இதனால் இங்கிலாந்து மண்ணில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் உலகின் தலைசிறந்த வீரர் என்று கருத முடியும் என முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்திருந்தார்.
ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்தியா இங்கிலாந்து செல்கிறது. அப்போது ஐந்து டெஸ்டில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் விராட் கோலி கவுன்டி போட்டியில் விளையாடுகிறார்.
இந்நிலையில் இங்கிலாந்து விராட் கோலிக்கு நம்பமுடியாத தொடராக இருக்கும் என ஷேர் வார்னே தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷேன் வார்னே கூறுகையில் ‘‘இந்தியா முதலில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. விராட் கோலியால் சாதிக்க முடியாத ஒரே இடம் அதுதான். இந்த வருடம் இங்கிலாந்து மண்ணில் அவர் சாதிப்பார். இங்கிலாந்து விராட் கோலிக்கு நம்ப முடியாத தொடராக இருக்கும் என நினைக்கிறேன். இங்கிலாந்தில் அசத்தும் அதே வேகத்துடன் அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலியா தொடரிலும் அசத்துவார்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X