search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்மருக்காக நான்கு வீரர்களை வெளியேற்ற இருக்கும் ரியல் மாட்ரிட்
    X

    நெய்மருக்காக நான்கு வீரர்களை வெளியேற்ற இருக்கும் ரியல் மாட்ரிட்

    நெய்மருக்காக நான்கு முன்னணி வீரர்களை வெளியேற்ற ரியல் மாட்ரிட் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Neymar #RealMadrid
    ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் லா லிகா கால்பந்து லீக்கில் விளையாடும் முன்னணி அணி ரியல் மாட்ரிட். அதேபோல் பார்சிலோனா அணியும் முக்கியத்துவம் வாய்ந்த அணி. ரியல் மாட்ரிட்டிற்கு முக்கிய எதிரி பார்சிலோனாதான்.



    பார்சிலோனா அணியில் பிரேசில் நாட்டின் தலைசிறந்த வீரரான நெய்மர் விளையாடி கொண்டிருந்தார். அவரை வாங்குவதற்கு ரியல் மாட்ரிட் விரும்பியது. ஆனால், அதில் பல சிக்கல்கள் இருந்ததால் நெய்மர் பிஎஸ்ஜி-க்கு சென்றார். கால்பந்து கிளப் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு 200 மில்லியன் பவுண்டுக்கு டிரான்ஸ்பர் ஆனார்.



    பிஎஸ்ஜி-க்கு சென்ற நெய்மர் 30 போட்டியில் 20 கோல்கள் அடித்தார். தற்போது நெய்மர் ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புகிறார். ரியல் மாட்ரிட் அணியும் அவரை வாங்க விரும்புகிறது. நெய்மர் வேண்டுமென்றால் ரியல் மாட்ரிட் ஏராளமான பணத்தை இழக்க வேண்டியிருக்கும்.



    இதை சரிகட்டும் வகையில் காரேத் பெலே, கரின் பென்சிமா, ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், இஸ்கோ ஆகியோரை 1745 மில்லியன் பவுண்டு அளவிற்கு விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நெய்மர் ரியல் மாட்ரிட் அணிக்கு வந்தால் நீண்ட காலமாக அந்த அணிக்காக விளையாடுவார்.
    Next Story
    ×