search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓரே போட்டியில் சாதனைப் படைத்த மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ
    X

    ஓரே போட்டியில் சாதனைப் படைத்த மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ

    எல் கிளாசிகோ போட்டியில் பார்சிலோனாவின் மெஸ்சி, ரியல் மாட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒருசேர சாதனைப் படைத்துள்ளனர். #ElClasico #Messi #Ronaldo
    எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் எஃப்சி பார்சிலோனா- ரியல் மாட்ரிட் இடையிலான ஆட்டம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் இரண்டு அணிகளும் தலா 2-2 கோல்கள் அடித்ததால் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

    பார்சிலோனா அணிக்காக மெஸ்சி ஒரு கோலும், ரியல் மாட்ரிட் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோலும் அடித்தனர். இதன்மூலம் இவருவரும் சாதனைப் படைத்துள்ளனர்.

    எல் கிளாசிகோ போட்டியில் பார்சிலோனாவிற்கு சொந்தமான கேம்ப் நவு மைதானத்தில் 7 கொல்கள் அடித்து, இந்த மைதானத்தில் அதிக கோல் அடித்த வீரர்கள் என்ற சாதனையைப் மெஸ்சி படைத்துள்ளார். இதற்கு முன் பகோ ஜென்டோ 6 கோல் அடித்ததுதான் சாதனையை இருந்தது.



    எல் கிளாசிகோ போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்காக 18 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை அல்ஃப்ரெடோ டி ஸ்டெபானோ படைத்திருந்தார். இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த சாதனையை சமன் செய்துள்ளார்.
    Next Story
    ×