search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் போட்டியால் உள்ளூர் தொடரை இழக்கிறார் மலிங்கா
    X

    ஐபிஎல் போட்டியால் உள்ளூர் தொடரை இழக்கிறார் மலிங்கா

    ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக இருப்பதால் மலிங்கா உள்ளூர் ஒருநாள் தொடரை இழக்க உள்ளார். #MI #SLvSA #Malinga
    இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. இவர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விளையாடுகிறார்.

    சமீப காலமாக உடற்தகுதி பிரச்சினைக் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருக்கிறார். தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. ஏலம் போகாத லிசித் மலிங்காவை மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு ஆலோசகராக நியமனம் செய்தது.

    இலங்கை அணி விரைவில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் உள்ளூர் தொடரில் தம்புல்லா அணிக்காக விளையாட இருந்தார். ஆனால் ஐபிஎல் தொடரில் வருகிற 25-ந்தேதி மற்றும் 26-ந்தேதி வரை மும்பை அணியில் இருக்க வேண்டியதால், உள்ளூர் தொடரில் பங்கேற்கவில்லை.



    இருந்தாலும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் விளையாடுவேன் என்று மலிங்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்கிடையே உள்ளூர் தொடரில் விளையாடினால்தான் சர்வதேச அணியில் இடம் என இலங்கை வாரியம் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×