என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் தொடரில் அதிக ஆட்ட நாயகன் விருது- 2-வது இடத்தில் ஹிட்மேன்
Byமாலை மலர்29 April 2018 8:52 AM GMT (Updated: 29 April 2018 8:52 AM GMT)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக ஆட்டநாயகன் விருதை பெற்ற ரோகித் சர்மா 16 முறை இந்த விருதை வென்று சாதனைப் படைத்துள்ளார். #IPL2018 #MI
ஐபிஎல் 11-வது சீசனின் 27-வது லீக் ஆட்டம் நேற்று புனேவில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.
சூர்யகுமார் யாதவ் (44), எவின் லெவிஸ் (47), ரோகித் சர்மா (56 அவுட்டில்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 19.4 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் 15 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 30 பந்தில் 47 ரன்கள்தான் தேவைப்பட்டது. ஆனால், 16-வது ஓவரில் சர்துல் தாகூர் 5 ரன்களும், 17-வது ஓவரில் பிராவோ 5 ரன்களும் மட்டுமே விட்டுக்கொடுக்க கடைசி 3 ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால் வாட்சன் வீசிய 18-வது ஓவரில் ரோகித் சர்மா ஒரு பவுண்டரியும், ஹர்திக் பாண்டியா ஒரு சிக்சரும் அடிக்க 15 ரன்கள் கிடைத்தது. 19-வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா நான்கு பவுண்டரிகள் விளாசினார். இதனால் மும்பை அணி எளிதாக வெற்றி பெற்றது.
33 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றிருந்த ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த விருது மூலம் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் 16 முறை ஆட்டநாயகன் விருது பெற்று 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் 20 ஆட்ட நாயகன் விருதுடன் முதல் இடத்தில் உள்ளார்.
டி வில்லியர்ஸ், யூசுப் பதான் ஆகியோரும் 16 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளனர். வார்னர் 15 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார். #IPL2018 #MI #RohitSharma
சூர்யகுமார் யாதவ் (44), எவின் லெவிஸ் (47), ரோகித் சர்மா (56 அவுட்டில்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 19.4 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 170 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் 15 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 30 பந்தில் 47 ரன்கள்தான் தேவைப்பட்டது. ஆனால், 16-வது ஓவரில் சர்துல் தாகூர் 5 ரன்களும், 17-வது ஓவரில் பிராவோ 5 ரன்களும் மட்டுமே விட்டுக்கொடுக்க கடைசி 3 ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால் வாட்சன் வீசிய 18-வது ஓவரில் ரோகித் சர்மா ஒரு பவுண்டரியும், ஹர்திக் பாண்டியா ஒரு சிக்சரும் அடிக்க 15 ரன்கள் கிடைத்தது. 19-வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா நான்கு பவுண்டரிகள் விளாசினார். இதனால் மும்பை அணி எளிதாக வெற்றி பெற்றது.
33 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றிருந்த ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த விருது மூலம் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் 16 முறை ஆட்டநாயகன் விருது பெற்று 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் 20 ஆட்ட நாயகன் விருதுடன் முதல் இடத்தில் உள்ளார்.
டி வில்லியர்ஸ், யூசுப் பதான் ஆகியோரும் 16 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளனர். வார்னர் 15 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார். #IPL2018 #MI #RohitSharma
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X