என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதுகிறதா? ஐசிசி சி.இ.ஓ பதில்
Byமாலை மலர்26 April 2018 3:14 PM GMT (Updated: 26 April 2018 3:14 PM GMT)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அடுத்தாண்டு நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அதில் மோதுகிறதா? என்ற கேள்விக்கு ஐசிசி தலைமை செயல் அதிகாரி பதிலளித்துள்ளார். #ICC #INDvPAK
கொல்கத்தா:
டெஸ்ட் தரவரிசையில் முதல் 9 இடங்களில் உள்ள அணிகளை கொண்டு உலக டெஸ்ட் லீக்கை அடுத்தாண்டு நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, 2013 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் திட்டமிட்டப்பட்டு பின்னர் பல்வேறு காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசினார். உலக டெஸ்ட் லீக்-ஆனது ஐந்து தொடர்களாக நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். “இரண்டு ஆண்டுகள் நடக்கும் இந்த தொடர் மிகவும் சவாலானது. வீரர்களின் உடல்தகுதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது இருக்கும்” என ரிச்சர்ட்சன் கூறினார்.
மேலும், “முழு போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்படும். முதல் இரண்டு சுற்று ஆட்டங்களில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவில்லை. இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. ஐசிசி நேரடி தொடர்கள் தவிர இந்தியாவும், பாகிஸ்தானும் தனி தொடராக மோதினால், அது சிறப்பான ஒன்றாக இருக்கும். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக பல்வேறு பிரச்சனைகள் அதில் உள்ளது” என அவர் தெரிவித்தார். #ICC #INDvPAK
டெஸ்ட் தரவரிசையில் முதல் 9 இடங்களில் உள்ள அணிகளை கொண்டு உலக டெஸ்ட் லீக்கை அடுத்தாண்டு நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, 2013 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் திட்டமிட்டப்பட்டு பின்னர் பல்வேறு காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசினார். உலக டெஸ்ட் லீக்-ஆனது ஐந்து தொடர்களாக நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். “இரண்டு ஆண்டுகள் நடக்கும் இந்த தொடர் மிகவும் சவாலானது. வீரர்களின் உடல்தகுதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது இருக்கும்” என ரிச்சர்ட்சன் கூறினார்.
டேவிட் ரிச்சர்ட்சன்
மேலும், “முழு போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்படும். முதல் இரண்டு சுற்று ஆட்டங்களில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவில்லை. இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. ஐசிசி நேரடி தொடர்கள் தவிர இந்தியாவும், பாகிஸ்தானும் தனி தொடராக மோதினால், அது சிறப்பான ஒன்றாக இருக்கும். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக பல்வேறு பிரச்சனைகள் அதில் உள்ளது” என அவர் தெரிவித்தார். #ICC #INDvPAK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X