என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீசாந்த் அறிவுரையை பின்பற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்துவீச்சாளர்
Byமாலை மலர்26 April 2018 12:55 PM GMT (Updated: 26 April 2018 12:55 PM GMT)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பஷில் தம்பி, தான் சோர்வடைவதுபோல் உணரும்போது, ஸ்ரீசாந்திடம் அறிவுரை கேட்பேன் என கூறியுள்ளார். #VIVOIPL #BasilThampi #Sreesanth
ஐதராபாத்:
கேரளா மாநிலம் ஏர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் பஷில் தம்பி. வலதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர் இந்தாண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இதுவரை 13 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13 விக்கெட்கள் எடுத்துள்ளார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் வளர்ந்துவரும் வீரர் விருது பெற்றார்.
இந்நிலையில், தான் சோர்வடைவது உணரும்போது, ஸ்ரீசாந்திடம் அறிவுரை கேட்பேன் என பஷில் தம்பி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
எனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் ஸ்ரீபாய் (ஸ்ரீசாந்த்) இடம் பேசுவேன். நான் சோர்வடைவது போல் உணரும் போது அவருக்கு மெஸ்சேஜ் செய்வேன், அவர் பதிலளிப்பார். குறிப்பிட்ட சில தருணங்களில் நான் எப்படி செயல்பட வேண்டும் அல்லது செயல்பட்டிருக்க வேண்டும் என அவர் அறிவுரை கூறுவார். அவர் எனக்கு தூண்டுதலாக இருப்பார்.
கடந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு, அனைவருக்கும் என்னை தெரியும். எனது பந்துவீச்சில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கடந்த ஐபிஎல் தொடருக்கு பின் தியோதர் கோப்பை, துலீப் கோப்பை, இந்தியா ஏ அணிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டேன். தொடர்ந்து பயிற்சி எடுக்குமாறு எம்எஸ்கே பிரசாத் எனக்கு மெஸ்சேஜ் அனுப்பினார்.
நான் யாருடனும் போட்டி போடவில்லை. எனது பந்துவீச்சை பற்றி எனக்கு நன்றாக தெரியும். என்னுடம் அந்த அளவு ஸ்விங் இல்லை. என்னால் முடிந்தது நல்ல லென்த்தில் வேகமாக பந்துவீச முடிந்தது மட்டுமே. நான் பந்துகளை தொடர்ந்து யார்கராக வீசியுள்ளேன். இந்த முறை எனது பந்துவீச்சு முறையை இரண்டு யார்கர் அதை தொடர்ந்து மிதவேக பந்து என மாற்ற முயற்சி செய்ய உள்ளேன். அதில் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகிறேன்.
இவ்வாறு பஷில் தம்பி கூறியுள்ளார். மேலும் பந்துவீச்சு பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மெக்கிராத் அளித்த அறிவுறைகள் குறித்தும் அவர் பேசினார். #VIVOIPL #BasilThampi #Sreesanth
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X