என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இத்தாலி செரி ஏ கால்பந்து- யுவான்டஸை வீழ்த்தி சாம்பியனுக்கு போட்டியிடும் நபோலி
Byமாலை மலர்23 April 2018 10:14 AM GMT (Updated: 23 April 2018 10:14 AM GMT)
யுவான்டஸை 1-0 என வீழ்த்தியன் மூலம் நபோலி ‘செரி ஏ’ கால்பந்து சாம்பியன் பட்டத்திற்கு ஒரு புள்ளி வித்தியாசத்தில் போட்டியிட்டு வருகிறது.
இத்தாலி கால்பந்து தொடரான ‘செரி ஏ’-யில் சாம்பியன் பட்டத்திற்கு யுவான்டஸ், நபோலி அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. 38 போட்டிகள் கொண்ட 2017-18 சீசனில் 33 ஆட்டங்கள் முடிவில் யுவான்டஸ் 85 புள்ளிகளுடன் முதல் இடத்திலும். நபோலி 81 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் இருந்தது.
இந்நிலையில் நேற்று இரண்டு அணிகளும் மோதின. இதில் வெற்றி அல்லது டிரா செய்தால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி விடலாம் என் நினைப்பில் யுவான்டஸ் களம் இறங்கியது. அதேவேளையில் நபோலி யுவுான்டஸை வீழ்த்திவிட்டால் ஒரு புள்ளிகள் மட்டுமே பின்தங்கிய நிலை ஏற்படும். எஞ்சிய 4 போட்டிகளில் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் களம் இறங்கியது.
முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகள் மோதியதால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இரு அணிகளும் கோல் அடிப்பதை விட, கோல் விட்டுக்கொடுத்து விடக்கூடாது என்பதில் கவனமாக விளையாடியது.
இதனால் 89 நிமிடங்கள் வரை கோலின்று ஆட்டம் சென்று கொண்டிருந்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில், 90-வது நிமிடத்தில் நபோலி கோல் அடித்து யுவான்டஸிற்கு அதிர்ச்சி அளித்தது. கலிடோ கவுலிபாலி கோல் அடித்தது யுவான்டஸ் மைதானத்தில் நபோலி அணியின் முதல் கோலை பதிவு செய்தார். இந்த தோல்வியால் யுவான்டஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரண்டு அணிகளும் மோதின. இதில் வெற்றி அல்லது டிரா செய்தால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி விடலாம் என் நினைப்பில் யுவான்டஸ் களம் இறங்கியது. அதேவேளையில் நபோலி யுவுான்டஸை வீழ்த்திவிட்டால் ஒரு புள்ளிகள் மட்டுமே பின்தங்கிய நிலை ஏற்படும். எஞ்சிய 4 போட்டிகளில் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் களம் இறங்கியது.
முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகள் மோதியதால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இரு அணிகளும் கோல் அடிப்பதை விட, கோல் விட்டுக்கொடுத்து விடக்கூடாது என்பதில் கவனமாக விளையாடியது.
இதனால் 89 நிமிடங்கள் வரை கோலின்று ஆட்டம் சென்று கொண்டிருந்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில், 90-வது நிமிடத்தில் நபோலி கோல் அடித்து யுவான்டஸிற்கு அதிர்ச்சி அளித்தது. கலிடோ கவுலிபாலி கோல் அடித்தது யுவான்டஸ் மைதானத்தில் நபோலி அணியின் முதல் கோலை பதிவு செய்தார். இந்த தோல்வியால் யுவான்டஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X