என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - கெயில் அதிரடி சதத்தால் ஐதராபாத் அணிக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
Byமாலை மலர்19 April 2018 4:32 PM GMT (Updated: 19 April 2018 4:32 PM GMT)
மொகாலியில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் கெயில் அதிரடியால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. #IPL2018 #SRHvKXIP
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல்.லின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டி
மொகாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.
முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும் கிறிஸ் கெயிலும் களமிறங்கினர். இந்த ஜோடி அரை சதம் கடந்த நிலையில், அணியின் எண்ணிக்கை 53 ஆக இருக்கும்போது ராகுல் 18 ரன்களில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய மயங்க் அகர்வால் 9 பந்துகளில் ஒரு சிக்சர், 2 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த கருண் நாயர் களமிறங்கினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் தூணாக நின்றார் கெயில். இவர் மீண்டும் தனது அதிரடியை தொடர்ந்தார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் பஞ்சாப் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. ஒரு ஓவருக்கு 10 ரன்கள் என்ற அளவில் ரன்களும் கிடைத்தது.
சிறப்பாக ஆடிய இந்த ஜோடி அணியின் எண்ணிக்கை 168 ஆக இருக்கும்போது பிரிந்தது. கருண் நாயர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆரோன் பிஞ்ச் இறங்கினார். அதிரடியில் மிரட்டிய கிறிஸ் கெயில் இந்த தொடரின் முதல் சதத்தை பதிவுசெய்தார்.
இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. கிறிஸ் கெயில் 63 பந்துகளில் 11 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 104 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 14 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான், சித்தார்த் கவுல், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி ஆடி வருகிறது. #IPL2018 #SRHvKXIP #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X