search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோசமான ஆட்டம்- ஒப்பந்தத்தில் இருந்து 6 வீரர்களை நீக்கியது வங்காள தேசம்
    X

    மோசமான ஆட்டம்- ஒப்பந்தத்தில் இருந்து 6 வீரர்களை நீக்கியது வங்காள தேசம்

    மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 6 வீரர்களை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியுள்ளது வங்காள தேச கிரிக்கெட் வாரியம். #BCB
    வங்காள தேச அணியில் முன்னணி வீரர்கள் ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தனர். தற்போது வங்காள தேச கிரிக்கெட் வாரியம் வீரர்களின் ஒப்பந்தத்தை மாற்றியமைத்துள்ளது. மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த 6 வீரர்கள் அதிரடியாக ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டள்ளனர். சவுமியா சர்கா், இம்ருல் கெய்ஸ், மொசாடெக் ஹொசைன், சபீர் ரஹ்மான், தஸ்கின் அஹமது, கம்ருல் இஸ்லாம் ஆகியோர் அந்த 6 வீரர்களாவார்கள்.

    ஷாகிப் அல் ஹசன், முஷ்டாபிஜூர் ரஹிம், மோர்தசா, தமிம் இக்பால், மெஹ்முதுல்லா ரியாத், மொமினுல் ஹக்யூ, ருபொல் ஹொசைன், முஷ்டாபிஜூர் ரஹ்மான், தைஜூல் இஸ்லாம், மெஹதி ஹசன் ஆகியோர் புதிய ஓப்பந்தத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக தேர்வாளர் ஹபிபுல் பாஷர் கூறுகையில் ‘‘சில வீரரர்கள் அணியில் தங்களது இடத்தை இழக்க நேரிட்டுள்ளது. அவர்களுக்கு ஒரு செய்தி முக்கியமானது. விடுபட்ட வீரர்களின் கதவு அடைக்கப்படுவதாக அர்த்தம் இல்லை. ஒவ்வொரு வீரர்களும் எதிர்காலத்தில் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.
    Next Story
    ×