என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
Byமாலை மலர்24 March 2018 8:29 AM GMT (Updated: 24 March 2018 8:29 AM GMT)
காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடக்க விழாவின் போது இந்தியா சார்பில் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். #CWG #PVSindhu
புதுடெல்லி:
21-வது காமன்வெல்த் போட்டி வருகிற ஏப்ரல் 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடக்கிறது.
இந்தியா சார்பில் 14 விளையாட்டுகளில் 219 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடக்க விழாவின் போது ஒவ்வொரு நாட்டு வீரர்- வீராங்கனைகளின் அணி வகுப்பு நடக்கும். இதில் இந்தியா சார்பில் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். அவர் பின்னால் இந்திய வீரர்-வீராங்கனைகள் அணிவகுத்து செல்கிறார்கள்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்து பல சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் அவருக்கு தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் அளிக்கப்பட்டு உள்ளது.
2006-ம் ஆண்டு மெல்போர்ன் காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், 2010-ம் ஆண்டு போட்டியில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, 2014-ம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய்குமார் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.
21-வது காமன்வெல்த் போட்டி வருகிற ஏப்ரல் 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடக்கிறது.
இந்தியா சார்பில் 14 விளையாட்டுகளில் 219 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடக்க விழாவின் போது ஒவ்வொரு நாட்டு வீரர்- வீராங்கனைகளின் அணி வகுப்பு நடக்கும். இதில் இந்தியா சார்பில் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். அவர் பின்னால் இந்திய வீரர்-வீராங்கனைகள் அணிவகுத்து செல்கிறார்கள்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்து பல சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் அவருக்கு தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் அளிக்கப்பட்டு உள்ளது.
2006-ம் ஆண்டு மெல்போர்ன் காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், 2010-ம் ஆண்டு போட்டியில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, 2014-ம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய்குமார் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X