என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு தயாராக கவுண்டி போட்டியில் கோலி விளையாடுகிறார்
Byமாலை மலர்24 March 2018 5:57 AM GMT (Updated: 24 March 2018 5:57 AM GMT)
இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற வேட்கையில் உள்ள விராட்கோலி இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கு முன்பாக அங்கு சென்று கவுண்டி போட்டியில் விளையாடுகிறார். #ViratKohli
மும்பை:
அடுத்த மாதம் தொடங்கும் ஐ.பி.எல். போட்டி தொடர் மே 27-ந்தேதியுடன் முடிகிறது.
அதன்பின் இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மோதுகிறது.
இப்போட்டி ஜூன் 14-ந்தேதி பெங்களூரில் தொடங்குகிறது. அதன்பின் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணி கேப்டன் விராட்கோலி 5 டெஸ்டில் 134 ரன் மட்டுமே எடுத்தார்.
இதனால் இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற வேட்கையில் உள்ள விராட்கோலி இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கு முன்பாக அங்கு சென்று கவுண்டி போட்டியில் விளையாடுகிறார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன்பு கவுண்டி போட்டியில் விளையாடுவது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கோலி முடிவு செய்துள்ளார்.
அவர் இங்கிலாந்து உள்ளூர் அணியான சர்ரே அணியில் விளையாடுகிறார். அந்த அணி ஜூன் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மூன்று 4 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
ஹம்ப்ஷ்யர், சோமர்செட், யார்க்ஷ்யர் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் கோலி விளையாடுகிறார். கோலி கவுண்டி போட்டியில் விளையாட உள்ளதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
அடுத்த மாதம் தொடங்கும் ஐ.பி.எல். போட்டி தொடர் மே 27-ந்தேதியுடன் முடிகிறது.
அதன்பின் இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மோதுகிறது.
இப்போட்டி ஜூன் 14-ந்தேதி பெங்களூரில் தொடங்குகிறது. அதன்பின் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணி கேப்டன் விராட்கோலி 5 டெஸ்டில் 134 ரன் மட்டுமே எடுத்தார்.
இதனால் இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற வேட்கையில் உள்ள விராட்கோலி இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கு முன்பாக அங்கு சென்று கவுண்டி போட்டியில் விளையாடுகிறார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன்பு கவுண்டி போட்டியில் விளையாடுவது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கோலி முடிவு செய்துள்ளார்.
அவர் இங்கிலாந்து உள்ளூர் அணியான சர்ரே அணியில் விளையாடுகிறார். அந்த அணி ஜூன் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மூன்று 4 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
ஹம்ப்ஷ்யர், சோமர்செட், யார்க்ஷ்யர் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் கோலி விளையாடுகிறார். கோலி கவுண்டி போட்டியில் விளையாட உள்ளதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X