search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையின் எப்.சி. வீரர்கள் மெயில்சன், நெல்சனின் ஒப்பந்தம் நீட்டிப்பு
    X

    சென்னையின் எப்.சி. வீரர்கள் மெயில்சன், நெல்சனின் ஒப்பந்தம் நீட்டிப்பு

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சென்னையின் எப்.சி. வீரர்கள் மெயில்சன், நெல்சனின் ஒப்பந்தம் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி.யை சாய்த்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. இறுதி ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து அசத்திய சென்னையின் எப்.சி. வீரர் மெயில்சன் ஆல்வ்சின் (பிரேசில்) ஒப்பந்த காலம் மேலும் 2 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே போல் பல கோல்கள் அடிக்க உதவிகரமாக இருந்த மற்றொரு சென்னை அணி வீரர் கிரிகோரி நெல்சனின் (நெதர்லாந்து) ஒப்பந்தம் மேலும் ஓராண்டுக்கு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 
    Next Story
    ×