search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் போட்டி அட்டவணையில் மாற்றம்
    X

    ஐபிஎல் 2018 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் போட்டி அட்டவணையில் மாற்றம்

    ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சொந்த மைதான ஆட்டங்களின் அட்டவணை தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #IPL2018 #KXIP
    ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர் பெங்களூர், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த 8 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டுமுறை மோத வேண்டும். இதனடிப்படையில் ஒவ்வொரு அணியும் 14 போட்டிகளில் விளையாடும். இதில் ஏழு போட்டிகளை சொந்த மைதானத்தில் நடத்தும்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மொகாலியையும், இந்தூரையும் சொந்த மைதானமாக கொண்டுள்ளது. மெகாலியில் நான்கு போட்டிகளையும், இந்தூரில் மூன்று போட்டிகளையும் நடத்தும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. இதில் கடைசி நான்கு ஆட்டங்களை மொகாலியில் நடத்தும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் பஞ்சாபில் உள்ள சண்டிகர் விமான நிலையம் மே 12-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை சீரமைப்பிற்காக மூடப்பட இருக்கிறது. இதனால் மொகாலி போட்டிகளை முன்னதாகவே நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

    மொகாலியில் ஏப்ரல் 8-ந்தேதி டெல்லி டேர்டெவில்ஸ் அணியையும், ஏப்ரல் 15-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும், ஏப்ரல் 19-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியையும் எதிர்கொள்கிறது.

    இந்தூரில் மே 4-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியையும், மே 6-ந்தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும், மே 12-ந்தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும், மே 14-ந்தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியையும் எதிர்கொள்கிறது.
    Next Story
    ×