என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரபாடாவின் அப்பீல் வெற்றி- கேப்டவுன் டெஸ்டில் விளையாடுகிறார்
Byமாலை மலர்20 March 2018 7:59 AM GMT (Updated: 20 March 2018 8:44 AM GMT)
ஐசிசி தடை விதித்ததை எதிர்த்து அப்பீல் செய்த மனுவில் ரபாடா வெற்றி பெற்றுள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்டில் விளையாடுகிறார். #SAvAUS #Rabada
கேப்வுடன்:
தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ரபாடா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின்போது ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய சந்தோசத்தில் அவரின் தோள்பட்டையை இடித்தவாறு சென்றார். இதைத்தொடர்ந்து ரபாடாவிற்கு, ஐசிசி விதிமுறை லெவல்-2ன்படி 3 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டது. ஏற்கனவே ஐந்து புள்ளிகள் இருப்பதால் இரண்டு டெஸ்டில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.
இந்த தடையை எதிர்த்து அவர் அப்பீல் செய்தார். நியூசிலாந்தை சேர்ந்த மைக்கேல் ஹெரான் என்ற நிதி கமிஷனர் இதுகுறித்து நேற்று விசாரணையை தொடங்கினார். ரபாடா சுமார் 6 மணி நேரம் தனது வாதத்தை எடுத்து வைத்தார்.
இந்த விசாரணை முடிவில் ரபாடாவின் குற்றம், லெவல் 2-ன் கீழ் வராது. லெவல் 1-ன் கீழ் வரும் என விசாரணையில் முடிவு செய்யப்பட்டது. இதனால் டிமெரிட் புள்ளி 3-ல் இருந்து 1-ஆக குறைக்கப்பட்டது. இதனால் 7 புள்ளிகள் பெற்றிருப்பதால் 3-வது டெஸ்டில் விளையாட அனுமதிக்கப்பட்டார். #SAvAUS #Rabada
தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ரபாடா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின்போது ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய சந்தோசத்தில் அவரின் தோள்பட்டையை இடித்தவாறு சென்றார். இதைத்தொடர்ந்து ரபாடாவிற்கு, ஐசிசி விதிமுறை லெவல்-2ன்படி 3 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டது. ஏற்கனவே ஐந்து புள்ளிகள் இருப்பதால் இரண்டு டெஸ்டில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.
இந்த தடையை எதிர்த்து அவர் அப்பீல் செய்தார். நியூசிலாந்தை சேர்ந்த மைக்கேல் ஹெரான் என்ற நிதி கமிஷனர் இதுகுறித்து நேற்று விசாரணையை தொடங்கினார். ரபாடா சுமார் 6 மணி நேரம் தனது வாதத்தை எடுத்து வைத்தார்.
இந்த விசாரணை முடிவில் ரபாடாவின் குற்றம், லெவல் 2-ன் கீழ் வராது. லெவல் 1-ன் கீழ் வரும் என விசாரணையில் முடிவு செய்யப்பட்டது. இதனால் டிமெரிட் புள்ளி 3-ல் இருந்து 1-ஆக குறைக்கப்பட்டது. இதனால் 7 புள்ளிகள் பெற்றிருப்பதால் 3-வது டெஸ்டில் விளையாட அனுமதிக்கப்பட்டார். #SAvAUS #Rabada
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X