என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிரடி ஆட்டத்தால் ஹீரோவான தினேஷ் கார்த்திக்- குவியும் பாராட்டுக்கள்
Byமாலை மலர்19 March 2018 6:38 AM GMT
முத்தரப்பு டி20 தொடரில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்தியாவிற்கு வெற்றி தேடி தந்த தினேஷ் கார்த்திக்கிற்கு பல விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். #NidahasTrophy #INDvBAN #DineshKarthik
புதுடெல்லி:
இலங்கையில் நடைபெற்ற நிதாஹாஸ் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேச அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார். வெற்றிக்கு 34 ரன்கள் தேவை என்ற நிலையில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 29 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். வெற்றி பெற கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற தினேஷ் கார்த்திக் அடித்த சிக்சர் இந்தியர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது ஆட்டத்தை மைதானத்தில் இருந்த அனைவரும் பாராட்டினர்.
அதே போல் பல வீரர்கள் டுவிட்டரிலும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் வீரர் சச்சின் டெண்டுகர், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மத்திய மந்திரி பியூஸ் கோயல், விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் பல கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக்கிற்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் ரசிகர்களும் தினேஷ் கார்த்திக்கிற்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். #NidahasTrophy #INDvBAN #DineshKarthik #tamilnews
இலங்கையில் நடைபெற்ற நிதாஹாஸ் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேச அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார். வெற்றிக்கு 34 ரன்கள் தேவை என்ற நிலையில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 29 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். வெற்றி பெற கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற தினேஷ் கார்த்திக் அடித்த சிக்சர் இந்தியர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது ஆட்டத்தை மைதானத்தில் இருந்த அனைவரும் பாராட்டினர்.
அதே போல் பல வீரர்கள் டுவிட்டரிலும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் வீரர் சச்சின் டெண்டுகர், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மத்திய மந்திரி பியூஸ் கோயல், விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் பல கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக்கிற்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் ரசிகர்களும் தினேஷ் கார்த்திக்கிற்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். #NidahasTrophy #INDvBAN #DineshKarthik #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X