என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிதாஹாஸ் முத்தரப்பு தொடரை வெல்ல இந்தியாவிற்கு அதிக வாய்ப்பு - ஜெயவர்தனே
Byமாலை மலர்18 March 2018 8:33 AM GMT (Updated: 18 March 2018 8:33 AM GMT)
வங்காள தேசத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது என ஜெயவர்தனே கூறியுள்ளார். #NidahasTorphy #INDvBAN
இலங்கையில் இந்தியா, வங்காள தேசம், இலங்கை இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா மற்றும் வங்காள தேச அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இன்றிரவு 7 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனும் ஆன ஜெயவர்தனே கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில் ‘‘வங்காள தேச அணி இழப்பதற்கு ஒன்றுமில்லை. இந்தியாவிற்கு எதிராக எல்லாமே அந்த அணிக்கு லாபம்தான். அவர்கள் வளர்ந்து வரும் அணி என்பதால், மகிழ்ச்சியாக எந்தவொரு நெருக்கடியும் இல்லாமல் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவார்கள்.
இந்திய சில முன்னணி வீரர்களை இழந்திருக்கலாம். ஆனால், தற்போது அணியில் உள்ள வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அனைத்து துறையிலும் இந்திய அணி சிறப்பான வகையில் உள்ளது. வங்காள தேசத்தை விட இந்திய அணி வேகப்பந்து வீச்சில் சிறப்பாக உள்ளது. பேட்டிங்கில் இரு அணிகளும் சமமாகத்தான் உள்ளது. வங்காள தேசத்தில் உள்ள டாப் ஆர்டர் அனுபவ வீரர்கள் இந்தியாவிற்கு எதிராக சேதங்களை விளைவிக்கக் கூடும்.
எப்படி இருந்தாலும் டி20 கிரிக்கெட் போட்டியில் அந்நாளில் எந்த அணி நெருக்கடியை சமாளித்து விளையாடுகிறதோ அந்த அணி வெற்றி பெறும்’’ என்றார்.
இன்றிரவு 7 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனும் ஆன ஜெயவர்தனே கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில் ‘‘வங்காள தேச அணி இழப்பதற்கு ஒன்றுமில்லை. இந்தியாவிற்கு எதிராக எல்லாமே அந்த அணிக்கு லாபம்தான். அவர்கள் வளர்ந்து வரும் அணி என்பதால், மகிழ்ச்சியாக எந்தவொரு நெருக்கடியும் இல்லாமல் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவார்கள்.
இந்திய சில முன்னணி வீரர்களை இழந்திருக்கலாம். ஆனால், தற்போது அணியில் உள்ள வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அனைத்து துறையிலும் இந்திய அணி சிறப்பான வகையில் உள்ளது. வங்காள தேசத்தை விட இந்திய அணி வேகப்பந்து வீச்சில் சிறப்பாக உள்ளது. பேட்டிங்கில் இரு அணிகளும் சமமாகத்தான் உள்ளது. வங்காள தேசத்தில் உள்ள டாப் ஆர்டர் அனுபவ வீரர்கள் இந்தியாவிற்கு எதிராக சேதங்களை விளைவிக்கக் கூடும்.
எப்படி இருந்தாலும் டி20 கிரிக்கெட் போட்டியில் அந்நாளில் எந்த அணி நெருக்கடியை சமாளித்து விளையாடுகிறதோ அந்த அணி வெற்றி பெறும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X