என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.எஸ்.எல். கால்பந்து: கடைசி அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது எப்.சி. கோவா
Byமாலை மலர்4 March 2018 6:21 PM GMT (Updated: 4 March 2018 6:21 PM GMT)
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜேம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய எப்.சி. கோவா கடைசி அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. #HeroISL #FCGoa #AtheleticodeKolkata
புதுடெல்லி:
10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று கடைசி நாள் லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. ஜேம்ஷெட்பூரில் நடைபெற்ற 89-வது லீக் ஆட்டத்தில் ஜேம்ஷெட்பூர் எப்.சி. - எப்.சி. கோவா அணிகள் மோதின. இது இரு அணியினருக்கும் கடைசி லீக் ஆட்டமாகும். மேலும் இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 29-வது நிமிடம் கோவா அணியின் பெர்ரான் கொரொமினாஸ் கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோவா அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் கோவா அணியின் பெர்ரான் கொரொமினாஸ் இரண்டாவது கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 69-வது நிமிடத்தில் கோவா அணியின் மனுவல் லான்சரோட் கோல் அடித்தார். ஜேம்ஷெட்பூர் அணி இறுதிவரை கோல் அடிக்காததால் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற எப்.சி. கோவா கடைசி அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
அடுத்ததாக கொல்கத்தாவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா - நார்த்ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணிகள் மோதின. இப்போட்டியின் பத்தாவது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் ராபி கீனே கோல் அடித்தார். அதன்பின் இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்கப்படாததால் கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கோவா அணி 30 புள்ளிகளுடன் மூனறாவது இடத்தை பிடித்தது. கொல்கத்தா அணி 16 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் நீடிக்கிறது. இதன்மூலம் பெங்களூரு, சென்னை, கோவா, புனே ஆகிய அணிகள் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அரையிறுதி போட்டியில் எப்.சி. புனே சிட்டி - பெங்களூரு எப்.சி., சென்னையின் எப்.சி. - எப்.சி. கோவா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #HeroISL #FCGoa #AtheleticodeKolkata
10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று கடைசி நாள் லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. ஜேம்ஷெட்பூரில் நடைபெற்ற 89-வது லீக் ஆட்டத்தில் ஜேம்ஷெட்பூர் எப்.சி. - எப்.சி. கோவா அணிகள் மோதின. இது இரு அணியினருக்கும் கடைசி லீக் ஆட்டமாகும். மேலும் இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 29-வது நிமிடம் கோவா அணியின் பெர்ரான் கொரொமினாஸ் கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோவா அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் கோவா அணியின் பெர்ரான் கொரொமினாஸ் இரண்டாவது கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 69-வது நிமிடத்தில் கோவா அணியின் மனுவல் லான்சரோட் கோல் அடித்தார். ஜேம்ஷெட்பூர் அணி இறுதிவரை கோல் அடிக்காததால் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற எப்.சி. கோவா கடைசி அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
அடுத்ததாக கொல்கத்தாவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா - நார்த்ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணிகள் மோதின. இப்போட்டியின் பத்தாவது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் ராபி கீனே கோல் அடித்தார். அதன்பின் இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்கப்படாததால் கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கோவா அணி 30 புள்ளிகளுடன் மூனறாவது இடத்தை பிடித்தது. கொல்கத்தா அணி 16 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் நீடிக்கிறது. இதன்மூலம் பெங்களூரு, சென்னை, கோவா, புனே ஆகிய அணிகள் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அரையிறுதி போட்டியில் எப்.சி. புனே சிட்டி - பெங்களூரு எப்.சி., சென்னையின் எப்.சி. - எப்.சி. கோவா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #HeroISL #FCGoa #AtheleticodeKolkata
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X