search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்தது சென்னையின் எப்.சி.
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்தது சென்னையின் எப்.சி.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய சென்னையின் எப்.சி. லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்தது. #HeroISL #ChennaiyinFC #MumbaiCityFC
    புதுடெல்லி:

    10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று சென்னையில் 8 மணிக்கு தொடங்கிய 88-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின. இது இரு அணியினருக்கும் கடைசி லீக் ஆட்டமாகும்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதிநேர ஆட்டம் 0-0 என சமனில் இருந்தது.



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் சென்னை அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் ரினே மிஹெலிக் கோல் அடித்தார். அதன்பின் இரு அணியினரும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் இந்த கோல் சென்னை அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சென்னை அணி இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்தது.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி 32 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது. மும்பை அணி 23 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் நீடிக்கிறது. பெங்களூரு, சென்னை, புனே அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. நாளை நடைபெறும் ஜேம்ஷெட்பூர் எப்.சி. - எப்.சி. கோவா இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும். மற்றொரு போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா - நார்த்ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #HeroISL #ChennaiyinFC #MumbaiCityFC
    Next Story
    ×