search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் ஹசாரே டிராபியில் ஆந்திராவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா
    X

    விஜய் ஹசாரே டிராபியில் ஆந்திராவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா

    ஜடேஜாக்களின் சிறப்பான ஆட்டத்தால் ஆந்திராவை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சவுராஷ்டிரா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. #VijayHazareTrophy
    விஜய் ஹசாரே டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் ஆந்திரா - சவுராஷ்டிரா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆந்திரா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சவுராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பரோட் (1), ஜானி (1), கேப்டன் புஜாரா (17) அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.

    ஆனால் தொடக்க வீரர் வியாஸ் (46), ரவீந்திர ஜடேஜா (56), வாசவடா (58), மங்கட் (40) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சவுராஷ்டிரா 49.1 ஓவரில்  255 ரன்கள் எடுத்து அல்அவுட் ஆனது.

    பின்னர் 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆந்திரா அணி களம் இறங்கியது. சவுராஷ்டிரா அணியின் தர்மேந்திரசிங் ஜடேஜாவின் அபார பந்து வீச்சால் ஆந்தியா 45.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 196 ரன்னில் சுருண்டது. இதனால் சவுராஷ்டிரா 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆந்திரா அணியின் சுமந்த், ரவி தேஜா தலா 42 ரன்கள் எடுத்தனர். ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    வரும் 27-ந்தேதி சவுராஷ்டிரா அணி இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியை எதிர்கொள்கிறது.
    Next Story
    ×