என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது டி20 போட்டி: தென் ஆப்ரிக்காவுக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
Byமாலை மலர்21 Feb 2018 5:52 PM GMT (Updated: 21 Feb 2018 5:52 PM GMT)
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில், மணீஷ் பாண்டே, தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்துள்ளது. #SAvIND #INDvSA
செஞ்சூரியன்:
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில், மணீஷ் பாண்டே, தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கிலும், 6 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.
3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்தியா சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். முதல் ஓவரில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை.
இரண்டாவது ஓவரை ஜூனியர் டாலா வீசினார். முதல் பந்திலேயே ரோகித் சர்மாவை அவுட்டாக்கி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா இறங்கினார். தவானும் ரெய்னாவும் இணைந்து அதிரடியாக ஆடினார். இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷிகர் தவான் 14 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அவரை தொடர்ந்து கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். அவர் ஒரு ரன் எடுத்திருந்த நிலையில், ஜூனியர் டாலாவிடம் அவுட்டானார். அப்போது இந்தியா 3 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். குறிப்பாக, 10-வது ஓவரை வீசிய ஷம்சி ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 19 ரன்கள் எடுக்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரெய்னா 24 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது இந்தியா 4 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. அவரை தொடர்ந்து தோனி இறங்கினார்.
மணிஷ் பாண்டேவும் தோனியும் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.
அதிரடியாக விளையாடிய மணீஷ் பாண்டேவும், தோனியும் அரை சதமடித்து அசத்தினர். இருவரும் சிக்சர்களும் பவுண்டரிகளுமாக அடித்தனர். இருவரும் இணைந்து 47 பந்துகளில் 107 ரன்களை எடுத்தனர்.
இறுதியில், இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. மணீஷ் பாண்டே 48 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் 79 ரனனுடனும், தோனி 28 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தென் ஆப்ரிக்கா அணி சார்பில் ஜூனியர் டாலா 2 விக்கெட்டும், டுமினி, பெலுகோவோயா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா விளையாடி வருகிறது. #SAvIND #INDvSA #tamilnews
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில், மணீஷ் பாண்டே, தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கிலும், 6 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.
3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்தியா சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். முதல் ஓவரில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை.
இரண்டாவது ஓவரை ஜூனியர் டாலா வீசினார். முதல் பந்திலேயே ரோகித் சர்மாவை அவுட்டாக்கி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா இறங்கினார். தவானும் ரெய்னாவும் இணைந்து அதிரடியாக ஆடினார். இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷிகர் தவான் 14 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அவரை தொடர்ந்து கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். அவர் ஒரு ரன் எடுத்திருந்த நிலையில், ஜூனியர் டாலாவிடம் அவுட்டானார். அப்போது இந்தியா 3 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். குறிப்பாக, 10-வது ஓவரை வீசிய ஷம்சி ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 19 ரன்கள் எடுக்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரெய்னா 24 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது இந்தியா 4 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. அவரை தொடர்ந்து தோனி இறங்கினார்.
மணிஷ் பாண்டேவும் தோனியும் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.
அதிரடியாக விளையாடிய மணீஷ் பாண்டேவும், தோனியும் அரை சதமடித்து அசத்தினர். இருவரும் சிக்சர்களும் பவுண்டரிகளுமாக அடித்தனர். இருவரும் இணைந்து 47 பந்துகளில் 107 ரன்களை எடுத்தனர்.
இறுதியில், இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. மணீஷ் பாண்டே 48 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் 79 ரனனுடனும், தோனி 28 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தென் ஆப்ரிக்கா அணி சார்பில் ஜூனியர் டாலா 2 விக்கெட்டும், டுமினி, பெலுகோவோயா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா விளையாடி வருகிறது. #SAvIND #INDvSA #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X