என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளைஞர்களுக்கு அஸ்வின் முன்மாதிரியாக திகழ்கிறார்: கிர்மானி
Byமாலை மலர்19 Feb 2018 7:15 AM GMT (Updated: 19 Feb 2018 7:15 AM GMT)
கிரிக்கெட்டில் அஸ்வின் செலுத்தும் அர்ப்பணிப்பும், அவரின் சாதனைகளும் இன்றைய இளைஞர்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மானி கூறியுள்ளார்.
சென்னை:
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் ஆர்.அஸ்வின்.
சென்னையை சேர்ந்த அவர் தனது அபாரமான பந்துவீச்சு மூலம் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.
அஸ்வினுக்கு ரோட்டரி மாவட்டம் 3232 சார்பில் “சென்னையின் அடையாளம் விருது” வழங்கப்பட்டது.
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி சென்னையில் நடந்த விழாவில் இந்த விருதை அவருக்கு வழங்கினார்.
அஸ்வின் செய்த சாதனைகளை குறிப்பிட்டு சொல்வதற்கு எனக்கு வார்த்தைகள் இல்லை. அவர் மிகச்சிறந்த ஜாம்பவனாக உருவாவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
இந்தியாவின், தமிழ்நாட்டின் பெருமையாக அஸ்வின் திகழ்கிறார். கிரிக்கெட்டில் அவர் செலுத்தும் அர்ப்பணிப்பும், அவரின் சாதனைகளும் இன்றைய இளைஞர்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறது.
கிரிக்கெட்டில் உள்ள ஏராளமான ஜென்டில்மேன்களுக்கு இடையே மிகச்சிறந்த மனிதர் அஸ்வின். அவரது புகழுக்கு இந்த விருது மேலும் புகழ் சேர்க்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கிர்மானி கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்ட மாவட்ட கவர்னர் ஆர்.சீனிவாசன், சர்வதேச ரோட்டரி இயக்குனர்ஆர்.பாஸ்கர், ஒருங்கிணைப்பாளர் செல்வம் அழகப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் ஆர்.அஸ்வின்.
சென்னையை சேர்ந்த அவர் தனது அபாரமான பந்துவீச்சு மூலம் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.
அஸ்வினுக்கு ரோட்டரி மாவட்டம் 3232 சார்பில் “சென்னையின் அடையாளம் விருது” வழங்கப்பட்டது.
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி சென்னையில் நடந்த விழாவில் இந்த விருதை அவருக்கு வழங்கினார்.
அஸ்வின் செய்த சாதனைகளை குறிப்பிட்டு சொல்வதற்கு எனக்கு வார்த்தைகள் இல்லை. அவர் மிகச்சிறந்த ஜாம்பவனாக உருவாவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
இந்தியாவின், தமிழ்நாட்டின் பெருமையாக அஸ்வின் திகழ்கிறார். கிரிக்கெட்டில் அவர் செலுத்தும் அர்ப்பணிப்பும், அவரின் சாதனைகளும் இன்றைய இளைஞர்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறது.
கிரிக்கெட்டில் உள்ள ஏராளமான ஜென்டில்மேன்களுக்கு இடையே மிகச்சிறந்த மனிதர் அஸ்வின். அவரது புகழுக்கு இந்த விருது மேலும் புகழ் சேர்க்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கிர்மானி கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்ட மாவட்ட கவர்னர் ஆர்.சீனிவாசன், சர்வதேச ரோட்டரி இயக்குனர்ஆர்.பாஸ்கர், ஒருங்கிணைப்பாளர் செல்வம் அழகப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X