என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.எஸ்.எல். கால்பந்து: அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை வீழ்த்தியது மும்பை சிட்டி எப்.சி.
Byமாலை மலர்18 Feb 2018 5:46 PM GMT (Updated: 18 Feb 2018 5:46 PM GMT)
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. அணி, அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை 2-1 என வீழ்த்தியது. #HeroISL #MumbaiCityFC #ChennaiyinFC
கவுஹாத்தி:
10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று கொல்கத்தாவில் 8 மணிக்கு தொடங்கிய 77-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா - மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின.
இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் மும்பை அணியின் மார்சியோ ரொசாரியோ கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்ட முடிவில் மும்பை அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 47-வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் பிபின் சிங் கொல் அடித்தார். அதைத்தொடர்ந்து 53-வது நிமிடத்தில் ரபா ஜோர்டா கோல் அடித்தார். அதன்பின் இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்காததால் மும்பை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. - ஜேம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின. இப்போட்டியில் 32-வது நிமிடத்தில் ஜேம்ஷெட்பூர் அணியின் வெல்லிங்டன் பிரியோரி கோல் அடித்து அவரது அணிக்கு முன்னிலை கொடுத்தார். அதன்பின் 88-வது நிமிடத்தில் சென்னையின் மொகமது ரபி கோல் அடித்தார். அதன்பின் எந்த கோலும் அடிக்காததால் ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இன்றைய போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. 21-ம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் எப்.சி. கோவா - டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #HeroISL #MumbaiCityFC #ChennaiyinFC
10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று கொல்கத்தாவில் 8 மணிக்கு தொடங்கிய 77-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா - மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின.
இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் மும்பை அணியின் மார்சியோ ரொசாரியோ கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்ட முடிவில் மும்பை அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 47-வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் பிபின் சிங் கொல் அடித்தார். அதைத்தொடர்ந்து 53-வது நிமிடத்தில் ரபா ஜோர்டா கோல் அடித்தார். அதன்பின் இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்காததால் மும்பை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. - ஜேம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின. இப்போட்டியில் 32-வது நிமிடத்தில் ஜேம்ஷெட்பூர் அணியின் வெல்லிங்டன் பிரியோரி கோல் அடித்து அவரது அணிக்கு முன்னிலை கொடுத்தார். அதன்பின் 88-வது நிமிடத்தில் சென்னையின் மொகமது ரபி கோல் அடித்தார். அதன்பின் எந்த கோலும் அடிக்காததால் ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இன்றைய போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. 21-ம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் எப்.சி. கோவா - டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #HeroISL #MumbaiCityFC #ChennaiyinFC
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X