என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.எஸ்.எல். தொடரில் கோவாவை வீழ்த்தி 3-வது இடத்திற்கு முன்னேறியது சென்னையின் எப்.சி.
Byமாலை மலர்15 Feb 2018 4:51 PM GMT (Updated: 15 Feb 2018 4:51 PM GMT)
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டிகளில் எப்.சி. கோவா அணியை வீழ்த்திய சென்னையின் எப்.சி. அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. #HeroISL #ChennaiyinFC #FCGoa
கொல்கத்தா:
10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று கோவாவில் 8 மணிக்கு தொடங்கிய 73-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா - சென்னையின் எப்.சி. அணிகள் மோதின.
இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 52-வது நிமிடம் சென்னையின் இனிகோ கால்டெரான் கோல் அடித்தார். அதன்பின் இரு அணியினரும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் இந்த கோல் சென்னை அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இப்போட்டியில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி புள்ளிப்பட்டியலில், 27 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. நாளை நடைபெறும் லீக் போட்டியில் பெங்களூரு எப்.சி - எப்.சி. புனே சிட்டி அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #HeroISL #ChennaiyinFC #FCGoa
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X