search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். தொடரில் கோவாவை வீழ்த்தி 3-வது இடத்திற்கு முன்னேறியது சென்னையின் எப்.சி.
    X

    ஐ.எஸ்.எல். தொடரில் கோவாவை வீழ்த்தி 3-வது இடத்திற்கு முன்னேறியது சென்னையின் எப்.சி.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டிகளில் எப்.சி. கோவா அணியை வீழ்த்திய சென்னையின் எப்.சி. அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. #HeroISL #ChennaiyinFC #FCGoa

    கொல்கத்தா:

    10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று கோவாவில் 8 மணிக்கு தொடங்கிய 73-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா - சென்னையின் எப்.சி. அணிகள் மோதின. 



    இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 52-வது நிமிடம் சென்னையின் இனிகோ கால்டெரான் கோல் அடித்தார். அதன்பின் இரு அணியினரும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் இந்த கோல் சென்னை அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இப்போட்டியில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.



    இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி புள்ளிப்பட்டியலில், 27 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. நாளை நடைபெறும் லீக் போட்டியில் பெங்களூரு எப்.சி - எப்.சி. புனே சிட்டி அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #HeroISL #ChennaiyinFC #FCGoa
    Next Story
    ×