search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5வது ஒருநாள் போட்டியில் இந்தியா பேட்டிங்- அணியில் மாற்றமில்லை
    X

    5வது ஒருநாள் போட்டியில் இந்தியா பேட்டிங்- அணியில் மாற்றமில்லை

    போர்ட் எலிசபெத்தில் நடைபெறும் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. அணியில் மாற்றம் ஏதுமில்லை. #SAvIND
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு போர்ட் எலிசபெத்தில் நடைபெறுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. தென்ஆப்பிரிக்கா கேப்டன் மார்கிராம் டாஸ் சுண்ட, விராட் கோலி ‘ஹெட்’ என அழைத்தார். ஆனால் ‘டெய்ல்’ விழ தென்ஆப்பிரிக்கா கேப்டன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    தென்ஆப்பிரிக்கா அணியில் கிறிஸ் மோரிஸ் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் ஷம்சி சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் இல்லை. #SAvIND #MSDhoni
    Next Story
    ×