search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கிள் ஓடியே செஞ்சூரி தட்டிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர்
    X

    சிங்கிள் ஓடியே செஞ்சூரி தட்டிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர்

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி சிங்கிள் ஓடியே 100 ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். #SAvIND #ViratKohli #Kohli
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி நேற்று 3-வது வீரராக களம் இறங்கி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் 159 பந்துகளை சந்தித்து 160 ரன் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும்.

    அவரது ஸ்கோரில் பவுண்டரி, சிக்சர் மூலம் 60 ரன்கள் அடங்கும். மீதியுள்ள 100 ரன்களை கோலி ஓடிதான் எடுத்தார். ஒரு ரன்களாக 75 முறையும் (75 ரன்), 2 ரன்களாக 11 தடவையும் (22 ரன்), 3 ரன்களாக ஒரு தடவையும் (3 ரன்) எடுத்தார். 100 ரன்களை ஓடி எடுத்த முதல் இந்தியர் கோலி ஆவார். சர்வதேச அளவில் 5-வது வீரர் ஆவார்.

    இதே மைதானத்தில் இதே தினத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டுபிளிஸ்சிஸ் 103 ரன்களை (ஸ்கோர் 185) ஓடி எடுத்திருக்கிறார்.

    மேலும் கோலி அதிகமான பந்துகளை சந்தித்தது இதுவே முதல்முறையாகும். 2012 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக டாக்கா மைதானத்தில் 148 பந்தில் 183 ரன்கள் எடுத்தார். இந்திய தொடக்க வீரர்கள் அல்லாத வகையில் அதிக பந்துகளை சந்தித்தவர் கோலி ஆவார். இதற்கு முன்பு அசாருதீன் 154 பந்தில் 83 ரன்கள் (1986) எடுத்து இருந்தார். #SAvIND #ViratKohli #Kohli
    Next Story
    ×