என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ரகானேவுக்கு வாய்ப்பு
Byமாலை மலர்22 Jan 2018 7:26 AM GMT (Updated: 22 Jan 2018 8:12 AM GMT)
தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஜோகன்ஸ்பர்க்கில் நடக்க இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரகானேவுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SAvIND #Rahane #JohannesburgTest
ஜோகன்ஸ்பர்க்:
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் கேப்டவுனில் நடந்த முதல் போட்டியில் 72 ரன் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 135 ரன் வித்தியாசத்திலும் இந்தியா தோற்று தொடரை இழந்தது.
இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 24-ந்தேதி ஜோகன்ஸ்பர்க்கில் தொடங்குகிறது. முதல் 2 டெஸ்டில் 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்காத ரகானேவுக்கு இந்த டெஸ்டில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்ஆப்பிரிக்கா பயணத்தில் இந்தியாவின் பேட்டிங் மோசமாக இருந்தது. பந்துவீச்சு சிறப்பாக இருந்தும் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இரண்டு டெஸ்டிலும் தோல்வி ஏற்பட்டது.
இதனால் ரகானேவுக்கு வாய்ப்பு கொடுக்க கேப்டன் விராட் கோலி முடிவு செய்துள்ளார். ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவர் களம் இறக்கப்படுகிறார்.
முதல் 2 டெஸ்டில் அணியின் துணை கேப்டனான ரகானே நீக்கப்பட்டதால் கடும் விமர்சனம் எழுந்தது. வீரர்கள் தேர்வில் கோலி மாற்றம் செய்தது எந்த பலனும் இல்லாமல் போனது. இதனால் ரகானேவை 11 பேர் கொண்ட அணியில் களம் இறக்க அவர் முடிவு செய்துள்ளார்.
மேலும் புவனேஷ்வர் குமாரும் அணிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்ஆப்பிரிக்க வீரர் பவுமா காயம் காரணமாக 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். உள்ளூர் போட்டியின் போது அவருக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. முதல் 2 டெஸ்டிலும் அவர் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #SAvIND #Rahane #JohannesburgTest
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் கேப்டவுனில் நடந்த முதல் போட்டியில் 72 ரன் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 135 ரன் வித்தியாசத்திலும் இந்தியா தோற்று தொடரை இழந்தது.
இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 24-ந்தேதி ஜோகன்ஸ்பர்க்கில் தொடங்குகிறது. முதல் 2 டெஸ்டில் 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்காத ரகானேவுக்கு இந்த டெஸ்டில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்ஆப்பிரிக்கா பயணத்தில் இந்தியாவின் பேட்டிங் மோசமாக இருந்தது. பந்துவீச்சு சிறப்பாக இருந்தும் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இரண்டு டெஸ்டிலும் தோல்வி ஏற்பட்டது.
இதனால் ரகானேவுக்கு வாய்ப்பு கொடுக்க கேப்டன் விராட் கோலி முடிவு செய்துள்ளார். ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவர் களம் இறக்கப்படுகிறார்.
முதல் 2 டெஸ்டில் அணியின் துணை கேப்டனான ரகானே நீக்கப்பட்டதால் கடும் விமர்சனம் எழுந்தது. வீரர்கள் தேர்வில் கோலி மாற்றம் செய்தது எந்த பலனும் இல்லாமல் போனது. இதனால் ரகானேவை 11 பேர் கொண்ட அணியில் களம் இறக்க அவர் முடிவு செய்துள்ளார்.
மேலும் புவனேஷ்வர் குமாரும் அணிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்ஆப்பிரிக்க வீரர் பவுமா காயம் காரணமாக 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். உள்ளூர் போட்டியின் போது அவருக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. முதல் 2 டெஸ்டிலும் அவர் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #SAvIND #Rahane #JohannesburgTest
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X