search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராட்கோலி, ரோகித்சர்மா சிறப்பாக ஆடவேண்டும்: ஷேவாக்
    X

    வீராட்கோலி, ரோகித்சர்மா சிறப்பாக ஆடவேண்டும்: ஷேவாக்

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற வேண்டுமானால் வீராட்கோலி, ரோகித்சர்மா சிறப்பாக விளையாட வேண்டும் என்று ஷேவாக் கூறியுள்ளார். #SAvIND #Sehwag
    மும்பை:

    வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 208 ரன் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 135 ரன்னில் சுருண்டு 72 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

    இதையடுத்து 11 பேர் கொண்ட அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான், ரோகித்சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டது குறித்து விமர்சனம் எழுந்தது.

    மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடும் ரகானேவை சேர்த்து இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

    முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், 2-வது டெஸ்டில் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல், ரகானே ஆகியோரை சேர்க்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    இந்த நிலையில் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக், 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற வேண்டுமானால் வீராட்கோலி, ரோகித்சர்மா சிறப்பாக விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.



    இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நான் கூறும் அறிவுரை என்னவென்றால், ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை அடிக்க முயற்சிக்ககூடாது. பவுன்ஸ் ஆகும் பந்தை உடலை வளைத்து ஆடபயிற்சி எடுக்க வேண்டும்.

    டெஸ்ட் தொடரில் இந்தியா எழுச்சி பெற 30 சதவீத வாய்ப்பே இருக்கிறது. தற்போது இந்திய அணி நெருக்கடியில் இருக்கிறது.

    2-வது டெஸ்ட் நடக்கும் செஞ்சூரியன் மைதானத்தில் சூழ்நிலையை பொறுத்து அணியை தேர்வு செய்ய வேண்டும். அணியில் ரகானேவை சேர்க்க வேண்டும். நான்கு முதன்மை பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டும்.

    இந்தியா வெற்றி பெற வேண்டுமானால் வீராட்கோலி, ரோகித்சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×