என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹர்திக் பாண்டியா அற்புதமான ஆல்-ரவுண்டராக உருவெடுப்பார்: தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் சொல்கிறார்
Byமாலை மலர்11 Jan 2018 4:13 AM GMT (Updated: 11 Jan 2018 4:13 AM GMT)
ஹர்திக் பாண்டியாவின் பந்து வீச்சு வேகம் இன்னும் அதிகரித்தால் உண்மையிலேயே அற்புதமான ஆல்-ரவுண்டராக உருவெடுப்பார் என தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் குளுஸ்னர் கூறியுள்ளார்.#SAvIND #HardikPandya #LanceKlusener
கேப்டவுன்:
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் குளுஸ்னர் அளித்த ஒரு பேட்டியில், ‘கேப்டவுன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஹர்திக் பாண்டியாவின் (95 பந்துகளில் 93 ரன்கள்) ஆட்டம் அருமையாக இருந்தது. அவரது அபாரமான பேட்டிங்கால் இந்தியாவுக்கு இருந்த நெருக்கடி தென்ஆப்பிரிக்க அணியின் பக்கம் திரும்பியது. அவர் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறார். அவரது பந்து வீச்சு வேகம் இன்னும் அதிகரித்தால் உண்மையிலேயே அற்புதமான ஆல்-ரவுண்டராக உருவெடுப்பார்.
முதல் டெஸ்டில் குறைந்த ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தோல்வியை சந்தித்தது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்து இருக்கும். அந்த போட்டியில் இருந்து இந்திய அணி நிறைய கற்று இருக்கும். உண்மையை சொல்லப்போனால் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை வெல்ல முடியாது என்பதே எனது கணிப்பாகும். 1-1 என்ற கணக்கில் தொடரை முடித்தால் அது இந்திய அணிக்கு நல்ல முடிவாகும். ஆனால் அதற்கு அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் குளுஸ்னர் அளித்த ஒரு பேட்டியில், ‘கேப்டவுன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஹர்திக் பாண்டியாவின் (95 பந்துகளில் 93 ரன்கள்) ஆட்டம் அருமையாக இருந்தது. அவரது அபாரமான பேட்டிங்கால் இந்தியாவுக்கு இருந்த நெருக்கடி தென்ஆப்பிரிக்க அணியின் பக்கம் திரும்பியது. அவர் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறார். அவரது பந்து வீச்சு வேகம் இன்னும் அதிகரித்தால் உண்மையிலேயே அற்புதமான ஆல்-ரவுண்டராக உருவெடுப்பார்.
முதல் டெஸ்டில் குறைந்த ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தோல்வியை சந்தித்தது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்து இருக்கும். அந்த போட்டியில் இருந்து இந்திய அணி நிறைய கற்று இருக்கும். உண்மையை சொல்லப்போனால் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை வெல்ல முடியாது என்பதே எனது கணிப்பாகும். 1-1 என்ற கணக்கில் தொடரை முடித்தால் அது இந்திய அணிக்கு நல்ல முடிவாகும். ஆனால் அதற்கு அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X