என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகல்
Byமாலை மலர்5 Jan 2018 6:43 AM GMT (Updated: 5 Jan 2018 6:43 AM GMT)
ஆஸ்திரேலியா ஓபன் போட்டி தொடங்க உள்ள நிலையில் செரீனா வில்லியம்ஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். #AustralianOpen #SerenaWilliams
கென்பெரா:
முன்னணி டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சுக்கும், அமெரிக்க தொழிலதிபர் அலெக்சிஸ் ஒஹானியனுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் வெற்றி பெற்ற செரீனா அதன் பின் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
குழந்தை பிறந்த பிறகு முதல் முறையாக கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட செரீனா பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஜலீனாவிடன் தோல்வியடைந்தார். இருப்பினும் ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் விளையாடுவார் எனக்கூறப்பட்டது. இந்நிலையில், செரீனா ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார். தனக்கு ஓய்வு தேவைப்படுவதால் போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.
2011-ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் விளையாடி வரும் செரீனா முதல் முறையாக ஆஸ்திரேலியா ஓபனிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா ஓபன் போட்டி வருகின்ற 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ளது. இப்போட்டியிலிருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே மற்றும் ஜப்பானின் கெய் நிஷிகோரி காயம் காரணமாக விலகியுள்ளனர்.
முன்னணி டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சுக்கும், அமெரிக்க தொழிலதிபர் அலெக்சிஸ் ஒஹானியனுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் வெற்றி பெற்ற செரீனா அதன் பின் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
குழந்தை பிறந்த பிறகு முதல் முறையாக கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட செரீனா பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஜலீனாவிடன் தோல்வியடைந்தார். இருப்பினும் ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் விளையாடுவார் எனக்கூறப்பட்டது. இந்நிலையில், செரீனா ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார். தனக்கு ஓய்வு தேவைப்படுவதால் போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.
2011-ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில் விளையாடி வரும் செரீனா முதல் முறையாக ஆஸ்திரேலியா ஓபனிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா ஓபன் போட்டி வருகின்ற 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ளது. இப்போட்டியிலிருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே மற்றும் ஜப்பானின் கெய் நிஷிகோரி காயம் காரணமாக விலகியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X