என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம்: முதல் டெஸ்டில் தவான் விளையாடுவது சந்தேகம்
Byமாலை மலர்28 Dec 2017 5:06 AM GMT (Updated: 28 Dec 2017 5:06 AM GMT)
இந்திய தொடக்க வீரர் ஷிகார் தவானுக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.
கேப்டவுன்:
வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட தென்ஆப்பிரிக்கா புறப்பட்டது.
நேற்று நள்ளிரவு இந்திய அணி மும்பையில் இருந்து தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பு ஓட்டலுக்கு தொடக்க வீரர் ஷிகர் தவான் இடது காலில் கட்டு போட்டபடி வந்தார். அவருக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பிசியோ தெரபி பெட்ரிக் பர்கத், தவானின் காயத்தின் தன்மை குறித்து ஆராய்ந்தார். அவருக்கு எம்.ஐ.ஆர். ஸ்கேன் செய்யப்படுகிறது.
இதனால் வருகிற 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் தவான் விளையாடுவது சந்தேகம். முதல் போட்டிக்குள் அவர் உடல் தகுதி பெறவில்லை என்றால் முரளிவிஜய்யுடன் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார்.
இதுபற்றி கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், தவானின் காயம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. பிசியோ தெரபி இதுவரை எந்த அறிக்கையையும் தேர்வுக் குழுவுக்கு தரவில்லை.
தற்போது அணியுடன் இணைந்து தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்று உள்ளார். ஆனால் முதல் டெஸ்டில் தவான் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றார்.
வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட தென்ஆப்பிரிக்கா புறப்பட்டது.
நேற்று நள்ளிரவு இந்திய அணி மும்பையில் இருந்து தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பு ஓட்டலுக்கு தொடக்க வீரர் ஷிகர் தவான் இடது காலில் கட்டு போட்டபடி வந்தார். அவருக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பிசியோ தெரபி பெட்ரிக் பர்கத், தவானின் காயத்தின் தன்மை குறித்து ஆராய்ந்தார். அவருக்கு எம்.ஐ.ஆர். ஸ்கேன் செய்யப்படுகிறது.
இதனால் வருகிற 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் தவான் விளையாடுவது சந்தேகம். முதல் போட்டிக்குள் அவர் உடல் தகுதி பெறவில்லை என்றால் முரளிவிஜய்யுடன் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார்.
இதுபற்றி கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், தவானின் காயம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. பிசியோ தெரபி இதுவரை எந்த அறிக்கையையும் தேர்வுக் குழுவுக்கு தரவில்லை.
தற்போது அணியுடன் இணைந்து தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்று உள்ளார். ஆனால் முதல் டெஸ்டில் தவான் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X