search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தூர் டி20 கிரிக்கெட்: இலங்கை டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
    X

    இந்தூர் டி20 கிரிக்கெட்: இலங்கை டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

    இந்தூரில் நடக்கும் இந்தியாவிற்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை கேப்டன் திசாரா பேரேரா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.
    இந்தியா - இலங்கை இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் தொடர் இந்தூரில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இலங்கை கேப்டன் திசாரா பேரேரா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார். ‘‘மைதானம் மிகவும் சிறியதாக இருக்கிறது. இதனால் பீல்டிங் தேர்வு செய்தோம்’’ என்று இலங்கை கேப்டன் தெரிவித்துள்ளார்.

    இலங்கை அணியில இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. விஷ்வா பெர்னாண்டோ, தசுன் ஷனகா நீக்கப்பட்டு சதீரா சமரவிக்ரமா, சதுரங்கா டி சில்வா சேர்க்கப்பட்டுள்ளனார்.



    இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ‘‘டாஸ் பெரிய பிரச்சினை இல்லை. மைதானத்தில் எப்படி செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம். அதிகமான தன்னம்பிக்கையுடன் இருக்க முடியாது’’ என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
    Next Story
    ×