search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு
    X

    3-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு

    விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கும் இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார்.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதற்கான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று மதியம் ஒன்றரை மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளா். இலங்கை அணியில் திரிமானே நீக்கப்பட்டு சதீரா சமரவிக்ரமா சேர்க்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×