search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய கலப்பு இரட்டையர் ஜோடி அரையிறுதியில் தோல்வி
    X

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய கலப்பு இரட்டையர் ஜோடி அரையிறுதியில் தோல்வி

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் பிரணவ் - சிக்கி ஜோடி தோல்வியை சந்தித்தது.
    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீரர்கள்- வீராங்கனைகளான பிரனாய், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிவி சிந்து, சாய்னா ஆகியோர் காலிறுதிக்கு மேல் முன்னேறவில்லை.

    கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா- சிக்கி ரெட்டி ஜோடி மட்டும் அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெற்ற அரையிறுதியில் இந்திய ஜோடி ஜப்பானின் தகுரோ ஹோகி - சயாகா ஹிரோடோ ஜோடியை எதிர் கொண்டது.



    இதில் இந்திய ஜோடி 21-14, 15-21, 19-21 எனத் தோல்வியடைந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. முதல் சுற்றை 21-14 என கைப்பற்றிய போதிலும் அடுத்த இரண்டு செட்டை இழந்து வெற்றியை பறிகொடுத்தது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லீ சாங் வெய் ஷி யுகியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். சாங் வெய்யின் 100-வது இறுதிப் போட்டி இதுவாகும். பெண்கள் ஒற்றையர் பிரிவில் கரோலினா மரின், ஹி பிங்ஜியாவோ-ஐ எதிர்கொள்கிறார்.
    Next Story
    ×