search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவை - மதுரை ஆட்டம் மழையால் ரத்து
    X

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவை - மதுரை ஆட்டம் மழையால் ரத்து

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கோவை கிங்ஸ்- மதுரை சூப்பர் ஜெயன்ட் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
    நத்தம்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றிரவு 22-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- மதுரை சூப்பர் ஜெயன்ட் அணிகள் திண்டுக்கல் நத்தத்தில் சந்திக்க இருந்தன. ஆனால் மாலையில் இருந்தே அங்கு மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து மழை பெய்ததால் இந்த ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதையடுத்து இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதுவரை எந்த வெற்றியும் பெறாத மதுரை அணிக்கு முதல்முறையாக ஒரு புள்ளி கிடைத்துள்ளது.

    இந்த சீசனில் மழையால் ரத்தான 2-வது ஆட்டம் இதுவாகும். ஏற்கனவே திண்டுக்கல்-கோவை அணிகள் இடையிலான ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது. 
    Next Story
    ×