search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக் கோப்பையை வெல்லும் வரை ‘நம்பர் 9’ சுற்றிக் கொண்டே இருக்கும்: கோஸ்வாமி சொல்கிறார்
    X

    உலகக் கோப்பையை வெல்லும் வரை ‘நம்பர் 9’ சுற்றிக் கொண்டே இருக்கும்: கோஸ்வாமி சொல்கிறார்

    உலகக் கோப்பையை வெல்லும் வரை ‘நம்பர் 9’ எங்களை துரத்திக் கொண்டே இருக்கும் என இந்திய வேகப்பந்து வீச்சு வீராங்கனை கோஸ்வாமி கூறியுள்ளார்.
    இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 12 வருடத்திற்குப் பிறகு 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை சந்தித்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 228 ரன்கள் சேர்த்தது. பின்னர் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினார்கள். அவர்களால் 219 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

    இந்த போட்டியில் இங்கிலாந்தை 228 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி முக்கியமான நபராக திகழந்தார். அவர் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, எங்களை உலகக்கோப்பையை வெல்லும் வரை துரத்திக் கொண்டே இருக்கும் என்று கோஸ்வாமி கூறியுள்ளார்.

    இதுகுறித்து கோஸ்வாமி கூறுகையில் ‘‘இறுதிப் போட்டியில் நாங்கள் தோல்வியடைந்தாலும், இந்தியாவில் எங்களுக்கு அளித்த வரவேற்பு நெகிழ வைக்கிறது. உலகக் கோப்பையை வெல்லும் வரை ‘நம்பர் 9’ எங்களை சுற்றிக் கொண்டே இருக்கும்.

    நான் கிரிக்கெட் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் எப்போதும் பிசியாக இருக்கிறேன். ஆகவே, எந்தவொரு விஷயத்திற்காகவும் நேரத்தை செலவிட முடியவில்லை. கிரிக்கெட்டிற்காக அதிக நேரம் தேவைப்படுகிறது’’ என்றார்.
    Next Story
    ×