என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்கள் உலகக் கோப்பை: மராட்டிய வீராங்கனைகளுக்கு தலா ரூ. 50 லட்சம் - அரசு அறிவிப்பு
Byமாலை மலர்28 July 2017 2:24 PM GMT (Updated: 28 July 2017 2:24 PM GMT)
பெண்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்த மராட்டிய வீராங்கனைகளுக்கு தலா ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 12 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பரபரப்பான இறுதிப் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது இந்தியா. என்றாலும் இறுதிப் போட்டி வரைக்கும் முன்னேறியது பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
இதனால் இந்தியா திரும்பியுள்ள வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டுக்கள் தெரிவித்தார். வீராங்கனைகளின் சொந்த மாநில அரசுகள் பரிசு அளித்து கௌரவப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பூனம் ரவுத், மோனா மெஷ்ரம், ஸ்மிரிதி மந்தனா ஆகியோரையும், அணி மானேஜர் மற்றும் பிசியோதெரபி ஆகியோரையும் சிறப்பிக்க அம்மாநில அரசு விரும்பியது.
அதன்படி இன்று அவர்களை மகாராஷ்டிரா மேல்சபை கூட்டத்தை பார்வையிட அழைத்தது. அப்போது மேல்சபை சேர்மன் ராம்ராஜே நிம்பல்கர் இந்திய அணியை பாராட்டும் வகையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
மாநில விளையாட்டுத்துறை மந்திரி வினோத் டவாடேவும், மராட்டிய வீராங்கனைகளை பாராட்டியுள்ளார். அவர் கூறும்போது, ‘‘இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். வீராங்கனைகள் சாதனையால் நாங்கள் பெருமையடைகிறோம்’’ என்று தெரிவித்தார்.
மாநில அரசு இவர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கவும் முடிவு செய்துள்ளது.
சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே, மூத்த காங்கிரஸ் தலைவர் நாராயண் ரானே ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனால் இந்தியா திரும்பியுள்ள வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டுக்கள் தெரிவித்தார். வீராங்கனைகளின் சொந்த மாநில அரசுகள் பரிசு அளித்து கௌரவப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பூனம் ரவுத், மோனா மெஷ்ரம், ஸ்மிரிதி மந்தனா ஆகியோரையும், அணி மானேஜர் மற்றும் பிசியோதெரபி ஆகியோரையும் சிறப்பிக்க அம்மாநில அரசு விரும்பியது.
அதன்படி இன்று அவர்களை மகாராஷ்டிரா மேல்சபை கூட்டத்தை பார்வையிட அழைத்தது. அப்போது மேல்சபை சேர்மன் ராம்ராஜே நிம்பல்கர் இந்திய அணியை பாராட்டும் வகையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
மாநில விளையாட்டுத்துறை மந்திரி வினோத் டவாடேவும், மராட்டிய வீராங்கனைகளை பாராட்டியுள்ளார். அவர் கூறும்போது, ‘‘இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். வீராங்கனைகள் சாதனையால் நாங்கள் பெருமையடைகிறோம்’’ என்று தெரிவித்தார்.
மாநில அரசு இவர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கவும் முடிவு செய்துள்ளது.
சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே, மூத்த காங்கிரஸ் தலைவர் நாராயண் ரானே ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X