என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரவி சாஸ்திரியின் சம்பளத்தை நிர்ணயிக்க நான்கு பேர் கொண்ட குழு
Byமாலை மலர்15 July 2017 4:03 PM GMT (Updated: 15 July 2017 4:03 PM GMT)
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரியின் சம்பளத்தை நிர்ணயிக்க நான்கு பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்தை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு ஏற்றுக்கொண்டது.
இவரது பதவிக்காலம் வரும் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை வரை இருக்கிறது. தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டாலும், சம்பளம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இதனால் சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவை நிர்வாகக் குழு அமைத்துள்ளது. இந்தக்குழு ரவி சாஸ்திரியின் சம்பளத்தை நிர்ணயம் செய்யும்.
நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய்
இந்தக் குழுவில் பிசிசிஐ பொறுப்பு தலைவர் சி.கே. கன்னா, சிஇஓ ராகுல் ஜோரி, நிர்வாகக் குழுவில் இடம்பிடித்துள்ள டயானா எடுல்ஜி மற்றும் பிசிசிஐ பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குனராக செயல்படும்போது வருடத்திற்கு 6 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் பயிற்சியாளர் பதவிக்காலத்தில் 6 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.
இவரது பதவிக்காலம் வரும் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை வரை இருக்கிறது. தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டாலும், சம்பளம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இதனால் சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவை நிர்வாகக் குழு அமைத்துள்ளது. இந்தக்குழு ரவி சாஸ்திரியின் சம்பளத்தை நிர்ணயம் செய்யும்.
நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய்
இந்தக் குழுவில் பிசிசிஐ பொறுப்பு தலைவர் சி.கே. கன்னா, சிஇஓ ராகுல் ஜோரி, நிர்வாகக் குழுவில் இடம்பிடித்துள்ள டயானா எடுல்ஜி மற்றும் பிசிசிஐ பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குனராக செயல்படும்போது வருடத்திற்கு 6 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் பயிற்சியாளர் பதவிக்காலத்தில் 6 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X