என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்று மாலைக்குள் தலைமை பயிற்சியாளர் பெயரை அறிவிக்க வேண்டும்: நிர்வாகக்குழு
Byமாலை மலர்11 July 2017 8:28 AM GMT (Updated: 11 July 2017 8:28 AM GMT)
இன்று மாலைக்குள் தலைமை பயிற்சியாளர் பெயரை அறிவிக்க வேண்டும் என்று நிர்வாகக்குழு பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் தனது பதவியில் இருந்து விலகினார். இதனால் புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, கங்குலி தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக்கு குழு நேற்று நேர்காணல் நடத்தியது. இந்த நேர்காணலுக்குப்பின் தலைமை பயிற்சியாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கிரிக்கெட் ஆலோசனைக்குழு தலைவரான கங்குலி, எங்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவை. இந்திய அணி கேப்டனுடன் தலைமை பயிற்சியாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு, இன்று மாலைக்குள் தலைமை பயிற்சியாளர் யார் என்று அறிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
நிர்வாகக்குழுவின் தலைவரான வினோத் ராய், இன்று மாலைக்குள் தலைமை பயிற்சியாளர் யார் என்று அறிவிக்க வேண்டும். இதுகுறித்து பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி, பிசிசிஐ பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுதரி ஆகியோரிடம் பேசியதாக பிசிசிஐ-க்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, கங்குலி தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக்கு குழு நேற்று நேர்காணல் நடத்தியது. இந்த நேர்காணலுக்குப்பின் தலைமை பயிற்சியாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கிரிக்கெட் ஆலோசனைக்குழு தலைவரான கங்குலி, எங்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவை. இந்திய அணி கேப்டனுடன் தலைமை பயிற்சியாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு, இன்று மாலைக்குள் தலைமை பயிற்சியாளர் யார் என்று அறிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
நிர்வாகக்குழுவின் தலைவரான வினோத் ராய், இன்று மாலைக்குள் தலைமை பயிற்சியாளர் யார் என்று அறிவிக்க வேண்டும். இதுகுறித்து பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி, பிசிசிஐ பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுதரி ஆகியோரிடம் பேசியதாக பிசிசிஐ-க்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X