search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஞ்சி டெஸ்ட்: 521 பந்துகளை சந்தித்து இரட்டை சதம் விளாசிய புஜாரா; சகா சதம்
    X

    ராஞ்சி டெஸ்ட்: 521 பந்துகளை சந்தித்து இரட்டை சதம் விளாசிய புஜாரா; சகா சதம்

    ராஞ்சி டெஸ்டில் புஜாரா அபாரமாக விளையாடி 521 பந்தில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். சகா சதம் அடித்து அவருக்கு உறுதுணையாக இருந்தார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 451 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 130 ரன்னுடனும், சகா 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சகா 214 பந்துகளை சந்தித்து சதம் அடித்தார். புஜாரா 521 பந்துகளை சந்தித்து இரட்டை சதம் அடித்தார். அதில் 21 பவுண்டரிகள் அடங்கும்.

    தொடர்ந்து விளையாடிய அவர் 202 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
    Next Story
    ×