search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி பதவி கிடைக்காததால் வருத்தம் இல்லை- நடிகை ரோஜா
    X

    மந்திரி பதவி கிடைக்காததால் வருத்தம் இல்லை- நடிகை ரோஜா

    மந்திரி பதவி கிடைக்காததால் எந்த வருத்தமும் இல்லை. கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று நகரி தொகுதியின் எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா கூறியுள்ளார்.
    நகரி :

    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக ஜெகன்மோகன்ரெட்டி பதவி ஏற்றார். பின்னர் 5 துணை முதல்-மந்திரிகள் உள்பட 25 மந்திரிகள் பதவி ஏற்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நகரி தொகுதியின் எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜாவுக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை.

    இந்தநிலையில் ஆந்திராவில் இன்று (புதன்கிழமை) முதல்முறையாக சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக நடிகை ரோஜா விமானம் மூலம் விஜயவாடா வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மந்திரி பதவி கிடைக்காததால் எந்த வருத்தமும் இல்லை. ஜாதிகளின் அடிப்படையில் எனக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×