என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்க்கண்டில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 11 பேர் பலி
Byமாலை மலர்10 Jun 2019 6:15 AM GMT (Updated: 10 Jun 2019 6:15 AM GMT)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 11 பேர் பலியாகினர், 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து பீகாரின் கயா நோக்கி ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள டணுவா காட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேருந்தில் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். படுகாயம் அடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர்கள் கூறினர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து பீகாரின் கயா நோக்கி ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள டணுவா காட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேருந்தில் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். படுகாயம் அடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர்கள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X