என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போர் விமானத்தின் பெட்ரோல் டேங்க் விழுந்து தீபிடித்தது -கோவா விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
Byமாலை மலர்8 Jun 2019 10:18 AM GMT (Updated: 8 Jun 2019 11:36 AM GMT)
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘மிக்’ ரக போர் விமானம் இன்று புறப்பட்டு சென்றபோது கூடுதல் பெட்ரோல் டேங்க் கீழே விழுந்து தீபிடித்ததால் கோவா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
பனாஜி:
கோவா தலைநகர் பனாஜியில் பயணிகள் விமானம் மற்றும் ராணுவ விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘மிக்-29K ’ ரக போர் விமானம் புறப்பட்டு சென்றது.
ஓடுபாதையில் நகர்ந்து வானில் உயரக்கிளம்பியபோது அந்த விமானத்தின் இறக்கை பகுதியில் உபரி எரிபொருளை சேமித்து வைக்கும் கூடுதல் பெட்ரோல் டேங்க் திடீரென்று கீழே விழுந்தது.
விழுந்த வேகத்தில் ஓடுபாதையை ஒட்டியுள்ள புல்வெளி பகுதியில் தீபிடித்ததால் கோவா விமான நிலையத்தின் சுற்றுப்புறத்தில் பயங்கரமான புகை மண்டலம் சூழ்ந்தது.
விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை போராடி அணைத்தனர். இதனால், விமான நிலையம் ஒருமணி நேரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர், வழக்கம்போல் விமானச் சேவைகள் தொடங்கின.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X