என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி சுட்டுக்கொலை
Byமாலை மலர்8 Jun 2019 8:47 AM GMT (Updated: 8 Jun 2019 8:47 AM GMT)
காஷ்மீர் மாநிலம் தெற்கு பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கி சண்டையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் தெற்கு பகுதியில் அனந்தநாக் மாவட்டம் உள்ளது.
இங்குள்ள நவ்காம் அருகே உள்ள வெரிநாக் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களும், மாநில போலீசாரும் இணைந்து இன்று காலை அந்த பகுதிக்குள் நுழைந்தனர்.
பாதுகாப்பு படை வீரர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்ட னர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ- முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி முகமது இக்பால் குண்டு பாய்ந்து பலியானான்.
அந்த பகுதியில் மேலும் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களை தேடும் வேட்டையில் பாதுகாப்பபு படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யை சேர்ந்த 6 உளவாளிகள் காஷ்மீரில் கைதாகி உள்ளனர். பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்த முயன்றதாக அவர்கள் கைதானார்கள்.
காஷ்மீர் மாநிலம் தெற்கு பகுதியில் அனந்தநாக் மாவட்டம் உள்ளது.
இங்குள்ள நவ்காம் அருகே உள்ள வெரிநாக் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களும், மாநில போலீசாரும் இணைந்து இன்று காலை அந்த பகுதிக்குள் நுழைந்தனர்.
பாதுகாப்பு படை வீரர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்ட னர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ- முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி முகமது இக்பால் குண்டு பாய்ந்து பலியானான்.
அந்த பகுதியில் மேலும் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களை தேடும் வேட்டையில் பாதுகாப்பபு படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யை சேர்ந்த 6 உளவாளிகள் காஷ்மீரில் கைதாகி உள்ளனர். பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்த முயன்றதாக அவர்கள் கைதானார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X