என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த வீடு அமித்ஷாவுக்கு ஒதுக்கப்படுகிறது
Byமாலை மலர்7 Jun 2019 1:38 AM GMT (Updated: 7 Jun 2019 1:38 AM GMT)
டெல்லியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த வீடு, அமித்ஷாவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, அவரது பதவிக்காலத்துக்குப்பின் டெல்லி கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள அரசு இல்லம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 2004-ம் ஆண்டில் அங்கு குடிபோன வாஜ்பாய், தனது மரணம் வரை (கடந்த ஆண்டு ஆகஸ்டு) அங்கேயே வசித்து வந்தார்.
அவரது இறப்புக்குப்பின் அவரது குடும்பத்தினர் கடந்த நவம்பர் மாதம் அந்த வீட்டை காலி செய்தனர். தற்போது அந்த வீட்டில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் ஒன்று அல்லது 2 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த வீடு தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உள்துறை மந்திரியும், பா.ஜனதா தலைவருமான அமித்ஷாவுக்கு ஒதுக்கப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. தற்போது எண்.11, அக்பர் ரோடு வீட்டில் வசித்து வரும் அமித்ஷா, சமீபத்தில் வாஜ்பாய் வாழ்ந்த வீட்டுக்கு சென்று வந்தார்.
அப்போது அவர் வீட்டில் சில மாற்றங்களை செய்யுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த வீடு அவருக்கு ஒதுக்கப்படுவது உறுதி எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியமைத்ததும், டெல்லியில் எந்த ஒரு தலைவரும் வசிக்கும் அரசு இல்லத்தை அவரது மறைவுக்குப்பின் நினைவு இல்லமாக மாற்றுவது இல்லை என முடிவு எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, அவரது பதவிக்காலத்துக்குப்பின் டெல்லி கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள அரசு இல்லம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 2004-ம் ஆண்டில் அங்கு குடிபோன வாஜ்பாய், தனது மரணம் வரை (கடந்த ஆண்டு ஆகஸ்டு) அங்கேயே வசித்து வந்தார்.
அவரது இறப்புக்குப்பின் அவரது குடும்பத்தினர் கடந்த நவம்பர் மாதம் அந்த வீட்டை காலி செய்தனர். தற்போது அந்த வீட்டில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் ஒன்று அல்லது 2 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அப்போது அவர் வீட்டில் சில மாற்றங்களை செய்யுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த வீடு அவருக்கு ஒதுக்கப்படுவது உறுதி எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியமைத்ததும், டெல்லியில் எந்த ஒரு தலைவரும் வசிக்கும் அரசு இல்லத்தை அவரது மறைவுக்குப்பின் நினைவு இல்லமாக மாற்றுவது இல்லை என முடிவு எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X